ஏரல் தேவி நட்டார் அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

ஏரல், ஜன. 26: ஏரல் தேவி நட்டார் அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். எம்.எல்.ஏவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் பாலகிருஷ்ணன், ஜெயசிவசுப்பிரமணியன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயகுமார், ஏரல் நகர செயலாளர் ஆத்திப்பழம், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார்,வை. ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் பாஸ்கர், அதிமுக சரவணன், தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: