சென்னை: பழம்பெரும் ஆவணப்பட தயாரிப்பாளர் எஸ்.கிருஷ்ணசாமி (88) சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இண்டஸ் வேலி டூ இந்திரா காந்தி ஆவணப்படம் மூலம் புகழ்பெற்ற எஸ்.கிருஷ்ணசாமிக்கு 2009ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பல ஆவணப்படங்களை எஸ்.கிருஷ்ணசாமி தயாரித்துள்ளார்.
