திருக்காட்டுப்பள்ளியில் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

திருக்காட்டுப்பள்ளி, ஜன 21: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கிராமப்புற விழிப்புணர்வு காவல்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய சட்ட விரோத குற்ற செயல்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் (19ம் தேதி) இரவு நடந்தது. திருவையாறு டிஎஸ்பி (பொ) சபியுல்லா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் கிராம மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related Stories: