பீகார்: பீகாரில் மகளிருக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தின் மெகா முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு மகளிரின் வாக்குகளை பெறுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி அரசு சார்பில் அவர்களின் வாங்கி கணக்கில் ரூ.10,000 செலுத்தப்பட்டது. சுமார் ரூ.1 கோடி 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில். இந்த திட்டத்தில் மெகா முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பெண்களின் வங்கிக்கணக்கில் மட்டுமின்றி ஆண்களுக்கும் முறைகேடாக ரூ.10,000 வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஆண்கள் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.10,000 பணத்தை திரும்ப கேட்டு பீகார் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தர்பங்கா மாவட்டம் ஜாலே கிராமத்தில் மட்டும் 14 ஆண்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வாங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை திருப்பி தர முடியாது என ஆண் பயனாளிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் வாக்குகளை திருப்பி தந்தால்தான் பணத்தை திருப்பி தருவோம் என பீகார் மக்கள் தெரிவித்துள்ளனர். எண்கள் வாக்கால்தான் பாஜக வெற்றி பெற்றது, வாக்களித்த உடன் கணக்கு தீர்ந்துவிட்டது என்று பீகார் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
