×

நேரு குறித்து சர்ச்சை பேச்சு ராஜ்நாத்சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் ஆவேசம்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோதரா அருகே பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,’நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி அயோத்தியில் பாபர் மசூதியை கட்ட விரும்பினார் ’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘ராஜ்நாத் சிங்கின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொய்யான தகவல்களை பேசி வரும் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Rajnath Singh ,Nehru ,Congress ,New Delhi ,Union Defense Minister ,Vadodara ,Gujarat ,Jawaharlal ,Babri Masjid ,Ayodhya ,
× RELATED காஷ்மீரில் கடும் குளிர் அலை: ஷோபியானில் -6.4 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது!