டூவீலர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

ஓசூர், ஜன.11: ஓசூர் ராஜா சிட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(45). சலவை தொழிலாளி. இவரது வீட்டருகே, 2 டூவீலர்களை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், 2 வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு சென்றனர். அப்போது வெளியே வந்த சக்திவேல் குடும்பத்தினர் வாகனங்கள் எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சக்திவேல், அட்கோ போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: