கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜன. 11: திண்டுக்கல்லில் தமிழ்நாடு கல்வித்துறை பணியாளர் சங்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முகமது ரபிக் வரவேற்றார். மாநில தலைவர் ராஜராஜன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் பாலசுப்ரமணியன், மாநில இணைச்செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் பூமிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நிர்வாக கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: