சென்னை: உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள், பார் கவுன்சில் ஆகியோருக்கு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அரசு அறிவித்துள்ளபடி முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்படும் அத்தியாவசிய பணிகளில் வழக்கறிஞர்களையும் சேர்க்க வேண்டும். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படாமல் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன.