தேன்கனிக்கோட்டையில் நரசிம்மசுவாமி கோயில் தேர் அச்சு திருட்டு

தேன்கனிக்கோட்டை, ஜன.4: தேன்கனிக்கோட்டையில் நரசிம்மசுவாமி கோயில் தேரின் அச்சை திருடி சென்ற மர்ம நபர்கள்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேன்கனிக்கோட்டையில் உள்ள கவிநரசிம்மசுவாமி கோயிலில், கடந்த மாதம் மர்ம நபர்கள்உண்டியல் பணத்தை திருடி சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து, கோயில் வளாகத்தில் இருந்த சிறிய தேர் அச்சுகளை திருடி சென்றுள்ளனர். தேரின் பெரிய அச்சுகள் இரண்டை எடுத்து செல்ல முடியாததால் கோயில் வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: