சென்னை: பயிர் காப்பீடு திட்டம் மற்றும் சேதம் அடைந்த பயிர்களை கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், இந்த பயிர் சேதங்களை கண்காணிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய பயிர்களில், 33%க்கு மேல் சேதம் அடைந்தால், இழப்பீடு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, “மழை காரணமாக சேதம் அடைந்த பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒரு வாரத்தில் நிறைவடையும். இழப்பீடு தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்” என்று தெரிவித்தனர்.
