- தமிழ்
- தமிழ்நாடு
- பிரதான தேர்தல் அதிகாரி
- திமுக
- அஇஅதிமுக
- காங்கிரஸ்
- பாஜக
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அர்ச்சனா பட்நாயக்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் 3 முறை வீடு தேடி வருவார்கள். அப்போது, பொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று உறுதி செய்யப்படும். இந்த பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது. இவை முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர், அதன் மீதான சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நேற்று இரவு 12 மணியில் இருந்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் வாக்காளர் பட்டியலில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது. டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பிறகே திருத்தம் செய்ய முடியும். ஜனவரி 31ம் தேதி வரை திருத்தம், சரிபார்த்தல் பணி நடைபெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும்.
