×

சுயஉதவிக்குழு மகளிர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மனநலம், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம். அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மகளிரை ஒன்றுபடுத்தி, சுயஉதவி குழுக்களாக ஒருங்கிணைத்து, அந்த சுய உதவிக்குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. தற்போதைய கால மாற்ற சூழ்நிலையிலும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், ஒவ்வொரு தனி நபரும் பல்வேறுவிதமான மன அழுத்தத்திற்கு உட்பட்டு, பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுயஉதவி குழு மகளிர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள 388 வட்டாரங்களிலும் 12,525 ஊராட்சிகளில் உள்ள 3,31,510 மகளிர் சுயஉதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கும், 16,562 பள்ளிகள் மற்றும் 1602 கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு மனநலம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு குறித்த பயிற்சி வழங்கி வருகிறது.

Tags : Chennai ,Tamil Nadu Women's Development Institute ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்