நீடாமங்கலம், டிச.30: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக உயிர் போத்து வேலிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க உயிர்வேலிகளான கிளுவை, ஒதியன், கள்ளி, வாதநாராயணன், கல்யாணமுருங்கை போன்ற போத்துகள் வைத்து வளர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்தது. இது உயிர் வேலியாக மட்டுமல்லாமல் ஆடு மாடுகளுக்கு தீவன தேவையையும் பூர்த்தி செய்து வந்தது.