சிவகாசியில் போலி லேபிள்கள் பறிமுதல்

சிவகாசி, டிச. 30: மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் பரமேஸ்வர் நாயக் (38). இவர் பிரபல பீடி கம்பெனியின் டீலராக உள்ளார். சிவகாசியில் பீடிகளின்  போலி லேபிள்கள் அச்சடிப்பதாக விருதுநகர் அறிவுசார் சொத்துரிமை  அமலாக்க துறை பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் சொத்துரிமை மற்றும் அமலாக்க துறை பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையிலான குழுவினர் சிவகாசியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சிவகாசி காந்தி ரோடு மற்றும் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஆப்செட் பிரிண்டர்ஸில் பாலகிருஷ்ணன் (55), இவரது சகோதரர் வேல்சாமி (62), மற்றும் இவரது மகன் நடராஜபெருமாள் (35)  ஆகியோர் பிரபல பீடி கம்பெனிகளின் போலி லேபிள்கள் அச்சடித்தது தெரிய வந்தது. இரண்டு கம்பெனிகளிலும் சேர்த்து ரூ. 22 லட்சம் மதிப்பிலான பிரபல பீடிகளின் போலி லேபிள்கள், இயந்திரங்களை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories: