சாலையில் பள்ளத்தால் விபத்து அச்சம்

தேவகோட்டை, டிச.30:  தேவகோட்டை சிவகங்கை ராஜா சாலையில் டி.எஸ்.பி அலுவலகம் உள்ளது. அதன் அடுத்த தெருவின் ஆரம்பத்தில் தேவகோட்டை நகராட்சி ஊழியர்கள் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள குழி தோண்டினர். பணிகள் முடிந்தும் பள்ளத்தை மூடாமல் விட்டு சென்றனர். இரவு நேரங்களில் அவ்வழியே வருபவர்கள் பள்ளம் இருப்பதை அறியாது விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் இப்பகுதி மக்கள் எடுத்து கூறியும் மறுக்கின்றனர். தொடர் விபத்தினை தடுக்க தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: