சின்னாளபட்டி, டிச. 30: ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கன்னிவாடி பேரூராட்சி ரெட்டியார்பட்டியில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி தலைமை வகித்தார். கன்னிவாடி பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிலால் உசேன், பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், பேரூர் துணை செயலாளர் சர்புதீன், அவைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ‘ஆத்தூர் தொகுதியில் அதிமுக, பாஜவினர் திமுக மீது பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.