தவாக ஆர்ப்பாட்டம்

வேப்பனஹள்ளி, டிச.30: மத்திய அரசின் வேளாண் மசோதா, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, காஸ் மானியம் ரத்து ஆகியவற்றை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வேப்பனஹள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் மாரிமுத்து, பாபு, மாவட்ட தலைவர் சனாவுல்லா, தொகுதி செயலாளர் மகேந்திரன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: