புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு சீனாவில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. வெளிநாட்டினருக்கான தற்போதைய விதிமுறைகளின்படி பயணிக்க தகுதியான சீனர்கள் முதலில் மூன்றாவது நாட்டிற்கு பயணம் செய்து அங்கிருந்து இந்தியாவிற்கு வருகிறார்கள். இந்தியாவிற்கு வரும் சீனர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.