கிருஷ்ணகிரி அருகே காங்கிரஸ் நிறுவன நாள் விழா

கிருஷ்ணகிரி, டிச.29:  கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, காங்கிரஸ் கட்சியின் 136வது நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் நகர தலைவர் தளபதி ரகமத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் எம்எல்ஏ., பங்கேற்று இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், ஜேசுதுரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஏகம்பவாணன், நாராயணமூர்த்தி, பன்னீர்செல்வம், வின்சென்ட், தவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, நகர காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் எலுமிச்சங்கிரி நாராயணசாமி, விஜய்(எ)குட்டி, லட்சுமி, பாண்டு, ஷாஜித்பாஷா, அக்பர், மைக்கேல், சொக்கலிங்கம், இருதயம், லண்டன் கோபால், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஓசூர் ஜூஜூவாடிக்கு வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் எவ்வளவு இடங்களில் போட்டியிடுவோம் என்பது குறித்து, திமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்,’ என்றார்.

Related Stories: