ஆலந்தூர்: ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் சார்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிவில் வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் தாம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கு நீண்ட தூரம் அலைய வேண்டும் என்பதால் ஆலந்தூரில் தனியாக சிவில் சார்பு நீதிமன்றம் அமைக்கக் கோரி ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் சார்பு நீதிமன்றம் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை கானொலி காட்சி மூலம் நடந்தது.