பாதாம் பனீர் கிரேவி

தேவையான பொருட்கள்

மல்லிவிதை(தனியா)-2 ஸ்பூன்

சீரகம் -1ஸ்பூன்

சோம்பு –அரைஸ்பூன்

மிளகு- அரைஸ்பூன்

வரமிளகாய்- 3

பெரியவெங்காயம்- 3

தக்காளி – 2

பச்சை மிளகாய்-3

பூண்டு பல்- 6

இஞ்சி- 1 துண்டு

சின்னபட்டை – 3

ஏலக்காய் – 3-4

பனீர்-1 பாக்கெட்

மஞ்சள்தூள் –கால்ஸ்பூன்

மல்லிதழை- சிறிதளவு

சமையல்எண்ணெய்- தேவைக்கு

வெண்ணெய்- விருப்பப்பட்டால்

செய்முறை:

முதலில் மல்லி விதை, சீரகம்,சோம்பு,மிளகு,வரமிளகாய் வறுக்க எடுத்துவைத்துக்கொள்ளவும்.2 தக்காளி, பூண்டு, 2 பெரியவெங்காயம்,இஞ்சி, பச்சை மிளகாய்வதக்கி அரைக்க கட்பண்ணி எடுத்துக்கொள்ளவும். 1பெரியவெங்காயம்,2 பச்சை மிளகாய் கட்பண்ணிக்கொள்ளவும்.பட்டை,ஏலக்காய், மல்லிதழை எடுத்துக்கொள்ளவும். மல்லி விதை,சோம்பு,சீரகம், மிளகு,வரமிளகாய் வறுத்து ஆறவைக்கவும்.வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு தக்காளி,பூண்டு,இஞ்சி, பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், 15பாதாம்பருப்பு எல்லாம் வதக்கி ஆறவைக்கவும்.வதக்கியது நன்கு ஆறவிடவும்.பனீர் எடுத்துவைக்கவும்.வறுத்ததை அரைத்துக்கொள்ளவும். வதக்கிய தக்காளி,வெங்காயம், இஞ்சி,பூண்டு,பாதாம் அரைத்துக்கொள்ளவும் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய் போடவும்.கட் பண்ணிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.பனீர் கட்பண்ணிக்கொள்ளவும் -வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் வெங்காயம், தக்காளி அரைத்ததைச் சேர்க்கவும்.பின் அரைத்தமசாலா சேர்க்கவும்.நன்கு கொதிக்கட்டும். பின் கட் பண்ணிய பனீர் சேர்க்கவும்.நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் கேஸை ஆப் பண்ணவும்.இறக