நினைவு நாளையொட்டி எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

நாகை,டிச.25: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

நகர தலைவர் தங்க கதிரவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் கணேசன், மாணவர் அணி செயலாளர் சுதாகர், மீனவர் அணி செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: