விருதுநகர், டிச.22: விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு சார்பில் ஆதிமூலம் தலைமையில் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து களப்பிரிவு பணியாளர்கள், வயர்மேன், போர்மென், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். களப்பிரிவில் காலியாக உள்ள ஹெல்பர், வயர்மேன் உள்ளிட்ட காலியிடங்களை காண்ட்டிராக்ட் முறையில் ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்ய டிச.16ல் அரசு உத்தரவிட்டது. உபமின்நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது. இரு உத்தரவுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.