திருவாரூர், டிச.22: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள புர சத்தாங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மகேந்திரன் (30). இவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை தஷ்வந்த். நேற்று முன்தினம் வீட்டு வாசலில் மகேந்திரன் தனது பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது குழந்தை தஷ்வந்த் அந்த பைக்கின் மீது ஏறியதில் பைக் கீழே சாய்ந்தது. இதில் பைக்கின் அடியில் குழந்தை சிக்கி கொள்ளவே நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.