அருப்புக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் நவீன சுகாதார வளாகம் திறப்பு

அருப்புக்கோட்டை, டிச. 18: அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் டிரைவர், கண்டக்டர், அலுவலர்கள் என 470 பேர் பணி புரிகின்றனர். இங்குள்ள சுகாதார வளாகம் இடிந்து விழும் நிலையில் மோசமாக இருந்தது. இந்நிலையில் தொமுச நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததையடுத்து  எம்எல்ஏ தொகுதி  நிதி ரூ. 6 லட்சம் மதிப்பில்  நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. வணிகம் மற்றும் இயக்கம் துணை மேலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். கிளைமேலாளர் சீனிவாசன் வரவேற்றார். சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட பொருளாளர் சாகுல்கமீது, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், ஒன்றிய சேர்மன் சசிகலா பொன்ராஜ், நகர திமுக செயலாளர் மணி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், தொமுச நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Related Stories: