சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்ததுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி மற்றும் நல்லகண்ணுவின் குடும்பத்தினர் இருந்தனர்.
நல்லகண்ணு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- Nallakannu
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
