வேளாண் சட்டத்தை எதிர்த்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், டிச.11: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்தும், அதனை திருத்தம் செய்யக் கோரியும், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணை செயலாளர் திருச்சித்தன் தலைமை தாங்கினார். நில உரிமை மீட்பு மாநில துணை செயலாளர் உலக நம்பி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் யுவராஜ், மாவட்ட நிர்வாகி தமிழ் வளவன், ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், நகர துணைச் செயலாளர் செல்வம், மாவட்ட மகளிரணி செயலாளர் சவரியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: