வத்தலக்குண்டு, டிச. 10: நிலக்கோட்டை அருகே அக்கரகாரப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார். டிரைவர். இவரை கடந்த நவ. 27ம் தேதி அணைப்பட்டி சாலையில் முன்விரோதம் காரணமாக துரைச்சாமிபுரத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் தற்போது மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் பாண்டிசெல்வம், தமிழரசன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து ஒருவரை மட்டும் கைது செய்ததாக தெரிகிறது.