×

தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது;

மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!

நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக – தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!

அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை – இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்!

இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Aghawai 84 ,Tamil Nadu ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,Aghawa 84 ,Mu. K. Stalin ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு மலையாள நடிகர்...