‘2வது திருமணம் செய்தவர் அடித்து துன்புறுத்துகிறார்’: சென்னையில் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மீது நடிகை ராதா குற்றச்சாட்டு..!!

சென்னை: சுந்தரா டிராவல்ஸ், அடாவடி உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ராதா தமது கணவரான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அடித்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் வசித்து வரும் 38 வயதான நடிகை ராதா, சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, கேம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கணவரை பிரித்து வாழும் இவருடன் தாயாரும், மகனும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எண்ணூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்தராஜா மீது நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலிகட்டி திருமணம் செய்துகொண்டு இருவரும் குடும்பம் நடத்தி வருவதாக கூறியுள்ளார். எனினும் நடத்தையில்  சந்தேகப்பட்டு அண்மை காலமாக வசந்தராஜா தம்மை அடித்து துன்புறுத்துவதாக ராதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, புகார் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி நடத்திய விசாரணையில், வசந்தராஜா ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ராஜா அண்ணாமலைபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தது தெரியவந்தது. மேலும் திருவான்மியூர் காவல் நிலையத்தில், வசந்தராஜா பணிபுரிந்த போது பழக்கம் ஏற்பட்டது என்றும் முதல் மனைவிக்கு தெரியாமல் தம்மை வசந்தராஜா 2வதாக திருமணம் செய்துகொண்டதாகவும் ராதா கூறியுள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா மற்றும் நடிகை ராதாவிடம் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் பைசூல் மீது 50 லட்சம் ரூபாய் மோசடி புகார் கொடுத்தவர் நடிகை ராதா என்பது குறிப்பிடத்தக்கது. …

The post ‘2வது திருமணம் செய்தவர் அடித்து துன்புறுத்துகிறார்’: சென்னையில் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மீது நடிகை ராதா குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: