15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

தர்மபுரி : தர்மபுரி சந்தைப்பேட்டை, குமாரசாமிபேட்டை, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் 15 கிலோ அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரசாயனம் ஊற்றி அழித்தனர். மேலும், அதனை விற்பனை செய்த 3 கடை உரிமையாளர்களுக்கு, ₹2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதையடுத்து, அழுகிய கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது. சுகாதாரமான முறையில் மீன்கள் விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

The post 15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: