13 மையங்களில் 3,250 பேர் எழுதுகின்றனர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி உடையார்பாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கல்லூரியில் நடைபெற்ற விளைாயட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வந்த மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் பள்ளி வழிப்பாட்டுக்கூட்டத்தில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் முல்லைகொடி தலைமை வகித்தார். தத்தனூர் எம் ஆர் கல்லூரியில் நிறுவனர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டிகளில் கேரம்,சதுரங்கம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளை பாராட்டி சான்றிதழ், பரிசுத்தொகையும், மற்றும் அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ள சிம்மவாகினி என்ற மாணவியையும் பாராட்டினார், மேலும் போட்டிகளுக்கான பயிற்சிஅளித்த ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் பாராட்டினார்.

The post 13 மையங்களில் 3,250 பேர் எழுதுகின்றனர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி உடையார்பாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: