பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போம் மதுரை காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

மதுரை, ஜூலை 24: பொது அமைதிக்கு

பங்கம் விளைவிப்போம் என மதுரை காவல்நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், சிலைமான் காவல்நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலைமான் தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், அனுப்பியவர் பெயர், விலாசம் எதுவும் இல்லாமல், ‘ஏஎம்எப்’ என அனுப்புநர் இடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், கடிதத்தில், “பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போம்” என போலீசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிலைமான் காவல் நிலைய எஸ்ஐ கார்த்திக், 506 (2) உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார். மதுரையில் சிலைமான் காவல்நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: