திருவொற்றியூர்: மாதவரத்தில் மாத்திரை சாக்லெட் கொடுத்து பைக்கில் வந்த ஆசாமிகள் கடத்த முயன்றனர். சிறுமி கூச்சலிட்டதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கொடுங்கையூரை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அதேப் பகுதி பள்ளியின் 3ம் வகுப்பு மாணவி. தற்போது பள்ளி விடுமுறை என்பதால், சிறுமி மாதவரம் தணிகாசலம் நகர், ஈ பிளாக்கில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் சிறுமி விளையாடியபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். சிறுமி சாப்பிட மறுத்ததால் கையை பிடித்து இழுக்க முயற்சித்தனர். உடனடியாக சிறுமி கூச்சலிட்டு கத்தியுள்ளார்.