சாத்தூர் அருகே பயன்பாடில்லா பயிற்சி மையம் சமூக விரோதிகளின் கூடாரமாகிறது

சாத்தூர், பிப். 13:  சாத்தூர் அருகே, பயன்பாடில்லா வேளாண் பயிற்சி மையம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சாத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியாபுரம் கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், வேளாண்மை துறை சார்பில், வேளாண் பயிற்சி மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. நாளடைவில் இந்த மையம் செயல்படாமல், தற்போது காட்சிப் பொருளாக உள்ளது. கட்டிடங்கள் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால், அருகே குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர். மேலும், இந்த கட்டிடத்தை ஆக்கிரமித்து விறகுகளை வைத்துள்ளனர். இங்கு சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. எனவே, வேளாண் பயிற்சி மைய கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: