சென்னை: செங்கல்பட்டு அழகேசன் நகர், அண்ணா சாலை பகுதியில் நேற்று காலை சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுமி அழுதபடி திரிந்து கொண்டிருந்தாள். இதை பார்த்த பொதுமக்கள் சிறுமியை அழைத்து விசாரித்தபோது, விவரம் சொல்ல தெரியாமல் திணறியது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து பெண் காவலர்கள் குழந்தைக்கு பால், பிஸ்கெட் கொடுத்து பெயர், விவரம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி தனது பெயர் சுவேதா என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால் தாய், தந்தை யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.