வேளச்சேரி: பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை 5 மணிக்கு, வள்ளுவர் கோட்டம் பகுதியிலிருந்து வந்த ஒரு லாரியில் இருந்து கொட்டப்பட்ட குப்பையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குப்பை பொருக்கும் வாலிபர்கள் உடனே பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.