பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கெங்கவல்லி, டிச.7: வீரகனூரில் தொடர் விபத்துகளை தவிர்க்க பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கெங்கவல்லி தாலுகா வீரகனூரில் பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலை செல்கிறது. இங்குள்ள தனியார் பள்ளி செல்லும் புனல்வாசல் ரோடு பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த சாலையை கடந்து தான் பெரம்பலூர், திருச்சி, அரியாலூர் மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு சேலத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பஸ்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்த வளைவை கடந்து தான் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வரவேண்டி உள்ளது.

இந்த சாலையை கடக்கும் ேபாது, வளைவு பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வீரகனூரில் உள்ள பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி, விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: