பெரம்பூர்: எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடற்படை அதிகாரி ஆனந்தன் தலைமையில், அதிகாரிகள் நேற்று அதிகாலையில் ஆந்திர மாநிலம் அருகே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை மீனவர்கள் 5 பேர், ஒரு படகில் வந்து, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை சுற்றி வளைத்த அதிகாரிகள், 5 பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த படகை பறிமுதல் செய்தனர். பின்னர், சென்னை துறைமுக போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.