எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

பெரம்பூர்: எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடற்படை அதிகாரி ஆனந்தன் தலைமையில், அதிகாரிகள் நேற்று அதிகாலையில் ஆந்திர மாநிலம் அருகே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை மீனவர்கள் 5 பேர், ஒரு படகில் வந்து, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை சுற்றி வளைத்த அதிகாரிகள், 5 பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த படகை பறிமுதல் செய்தனர். பின்னர், சென்னை துறைமுக போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், இலங்கையை சேர்ந்த ரோகன் பெராரே (57), அந்தோணி பெர்னாண்டோ (53), பெராரே (42), பெருமாள் ராஜ் (25), சுரேஷ்குமார் (36) என தெரிந்தது. மேலும் விசாரணையில், இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதால் படகு, இந்திய எல்லைக்குள் வந்ததாக அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

Related Stories: