பெண்ணிடம் செயின் பறிப்பு

சிவகங்கை, டிச.6:  சிவகங்கையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.சிவகங்கை அருகே மேலவாணியங்குடியை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி இந்திரா(52). இவர் நேற்று முன்தினம் மாலை சிவகங்கையில் மானாமதுரை சாலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் இந்திராவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து இந்திரா கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: