பெண் தற்கொலை

திருப்புத்தூர், டிச.6:திருப்புத்தூர் அருகே புதுவளவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி தேவி(38). இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டவராயன்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பிரிசோதனைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து கண்டவராயன்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார். இவருக்கு முதுகு தண்டுவடத்தில் வலி இருந்ததாகவும், சிகிச்சை செய்தும் வலி தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

Related Stories: