சென்ைன, டிச. 6: மழை பெய்தும் தண்ணீர் வரவில்லை என்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் வரத்து கால்வாய்களில் ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு மண்டல தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. இதற்கு, ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கால்வாய்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதால், நீர் கடத்தும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், வரத்து கால்வாய்களில் இருந்து தண்ணீர் ஏரிகளுக்கு செல்லாமல் திருப்பி விடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தும் தண்ணீர் குறைவாக ஏரிகளுக்கு வருவதாக கூறப்படுகிறது.