சேலம், செப்.9: சேலம் சாமிநாதபுரத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடந்தது. சேலம் சாமிநாதபுரத்தில் ஆரோக்கிய அன்னை சிற்றாலய பெருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு வந்தது. இதில் நேற்று மாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி, மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.