காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பச்சையப்பன் பள்ளி, ஆற்காடு நாராயணன் சாமி பள்ளி மற்றும் கா.மு.சுப்பராயன் ஆகிய மேனிலைப்பள்ளியில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கொடியேற்றி மரியாதை செலுத்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர், பள்ளியில் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.