சென்னை: நெசாவளர்களின் வாழ்வில் ஏற்றம்பெற கதர் தொழிலுக்கு கைகொடுப்போம் என முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து வாழ வழி வகுக்கிறது என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, அன்னாரின் பிறந்தநாளான இந்நன்னாளில், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும். கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டில் உள்ள 51 கதரங்காடிகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.