வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தலை அறிவிக்காதது தவறு: உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை: வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தலை அறிவிக்காதது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வென்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. ஆனால் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு தான் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தது. மீதமுள்ள 3 தொகுதிகள் அரவாக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அந்த 3 தொகுதிகளை சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்து மனுவும் அளித்திருந்தனர். மேலும் திருப்பரங்குன்றம் தேர்தலை பொருத்த வரையில் வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு நிலுவையில் இருக்கிறது. மேலும் வழக்கை தொடர்ந்த சரவணன் அந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமுருகன் முன் விசாரணைக்கு வந்த நிலையில் திமுக முத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வழக்கை காரணம் காட்டி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததாகவும்,  எனவே வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார்.  

வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தலை அறிவிக்காதது தவறு என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: