புதுடெல்லி: ஈரானில் இருந்து அடுத்த மாதம் 8 மில்லியன் பேரல்களை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது. இது நடப்பு மாதத்தை விட 12 சதவீதம் குறைவு. ஈரான் மீது தடை விதித்துள்ள அமெரிக்கா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் கடந்த நவம்பர் மாதம் அனுமதி அளித்தது. 6 மாதங்களுக்கு இந்த சலுகை அமலில் இருக்கும். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் அல்லது மே மாதம் வரை மாதம் ஒன்றுக்கு 9 மில்லியன் பேரல்களை இந்தியா இறக்குமதி செய்யலாம். வரும் ஏப்ரல் மாதத்தில் ஈரானில் இருந்து இந்தியா 8 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்ய உள்ளது. இது இந்த மாதம் மேற்கொள்ளும் இறக்குமதியை விட 12 சதவீதம் குறைவாகும்.