புதுடெல்லி: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்கான இன்று சம்பளம் வழங்கப்படும் என, அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கநர் அனுபம் வஸ்தவா தெரிவித்துள்ளார். மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஎன்என்எல்லில் 36 தொலை தொடர்பு மாநிலங்கள் உள்ளன. இதில், 1.76 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், பிஎஸ்என்எல் தலைமை அலுவலகமான டெல்லி நிர்வாக பிரிவு அலுவலகம், கேரளா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டும் பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.