திருவொற்றியூர்: மணலி மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட கொசப்பூரில் கடந்த 2012ம் ஆண்டு ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம், இப்பகுதி வாலிபர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலில் இந்த உடற்பயிற்சி கூடம் சேதமடைந்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இதனை சீரமைக்கவில்லை. ஆனால், உடற்பயற்சி கூடம் சீரமைக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்து இருந்தனர்.