உடற்பயிற்சி கூடம் சீரமைப்பு

திருவொற்றியூர்: மணலி மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட  கொசப்பூரில் கடந்த 2012ம் ஆண்டு ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம், இப்பகுதி வாலிபர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலில் இந்த உடற்பயிற்சி கூடம் சேதமடைந்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இதனை சீரமைக்கவில்லை. ஆனால், உடற்பயற்சி கூடம் சீரமைக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம் மணலி மண்டல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இந்த உடற்பயிற்சி மையத்தில் உடைந்திருந்த மேற்கூரை, கண்ணாடிகளை புதியதாக மாற்றினர். பழுதாகி இருந்த மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை சரி செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: