வங்கிகள் இணைப்பு அதிகாரி தகவல்

புதுடெல்லி: பாங்க் ஆப் பரோடாவுடன் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த  மாதம் அளித்தது. இந்நிலையில் மேலும் சில வங்கிகள் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,  பிற வங்கிகளை பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.  பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா  வங்கி, விஜயா வங்கிகளை இணைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிந்த பிறகே அடுத்த கட்ட வங்கிகள் இணைப்பு குறித்து பரிசீலனை  செய்யப்படும். அதுவரை புதிய இணைப்பு திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: